பல இசைக்கச்சேரிகளில் தனி ஆவர்த்தனம் என்று பக்க வாத்தியக்காரர்களுக்கு ஒரு 20 முதல் 30 நிமிடங்கள் ஒதுக்குகிறார்கள். இந்த தனி ஆவர்த்தனம் என்பதே எதற்கு என்று பல சர்ச்சைகள் பல காலமாகவே இருந்து வருகின்றன. காதில் படும் காரணங்கள் இவையே:
1. பாடகருக்கு கொஞ்சம் ஓய்வு தேவை.
2. கேட்பவர்களுக்கு கொஞ்சம் ஓய்வு தேவை.
3. இடையே கொஞ்சம் நேரம் கிடைத்தால்தான் கான்டீனுக்குச் சென்று போண்டா, நெய் ரோஸ்ட்
சாப்பிட்டு வரமுடியும்.
4. பக்க வாத்யக்காரர்கள் தாங்களும் இருக்கிறோம், எங்கள் வித்வத்தை எப்பொழுது தான் காண்பிப்பதுஎன்று சொல்வதற்கு.
5. இசைக் கச்சேரியின் ஒரு முக்கிய (ஏன் ! பிரதான) அங்கம் தனி ஆவர்த்தனம் .
கோவில்களில் ஜாம பூஜை துவங்கும்போது கூட முதலில் நாதஸ்வரத்திற்குப் பின் மத்தளம்
வாசிக்கிறார்கள். ஒரு கச்சேரியின் துவக்கத்திலேயே மிருதங்க வித்துவான் ச்ருதிப்பெட்டியுடன்
கூட தானும் தும்,தும், என்று ஓசை எழுப்புகிறார். அந்த ஒலி ச்ருதியுடன் இணைவதை பாடகர்
கவனித்தபின் தான் " வாதாபி கணபதி ' என்று ஆரம்பிக்கிறார்.
இவையெல்லாம் என்ன ? ஏன்? என கேள்வி வருகிறது ? ஒரு தவில் இல்லாமல் நாதஸ்வரம் வாசிக்கமுடியாதா? ஒரு மிருதங்கம், கடம், கஞ்சிரா, கொன்னக்கோல் இல்லாமல், ஒரு பாடகர் பாடமுடியாதா ? இசை சாத்திரம் இன்ன சொல்கிறது ?
"ஸொகஸுகா ம்ருதங்க தாளமு.." என ஒரு தியாகராஜரின் க்ருதியில் கூட ம்ருதங்கத்திற்கான
முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. ஒரு இசைக்கச்சேரி என்றால் ஒரு கோபுரம் கட்டுவது போல.
அதற்கு அஸ்திவாரம் தாளம். இந்த தாள தளத்தின் மேல் தான் நாதம் கோபுரமாக உருவாகிறது.
தாளக்கட்டின் அடிவாரத்தின் மேல் தான் ஸ்ருதி இணைந்து நாதமாக அமையும்போது தான் அதை
ஒரு ராகத்தின் கட்டுமான பரிமாணங்களுக்குள் அமைக்க இயலும். ஏழு ஸ்வரங்களூக்குள் எத்தனை
ராகம் ? ராகத்தை ஆலாபனை செய்யலாம். ஆயினும் ஒரு பாடலின் மேல் அந்த ஸ்வரங்கள் அழகென
பரிணமிக்க வேண்டுமெனில் தாளம், லயம் பிரதானம். முக்கியம். வேறு விதமாகச் சொல்லப்போனால்,
ஒரு ஸ்வரத்தை இன்னொரு ஸ்வரத்தோடு இயைந்து இணைப்பதற்கு ஒரு காலப்பிரமாணத்தின் (லயத்தின்) அடிப்படையிலேதான் அமைகிறது. வர்ணம் சொல்லிக்கொடுக்கும்போதே தாளக்கட்டு சரியாக வருகிறதா , அந்த தாளக்கட்டுக்குத் தகுந்தபடிதான் ஸ்வரங்களோ அல்லது ஸாஹித்யமோ செல்கிறதா என ஆசிரியர்
கூர்ந்து கவனிக்கிறார்.
இந்தக் கால ப்பிரமாணம் சற்று நகர்ந்து போனாலும் ஸ்வரங்கள் சரிவர கோர்க்காது அபஸ்வரம்
ஒலிக்கிறது. ஆகவே ஸ்ருதி தாய் எனின் லயம் தந்தை.
ஒவ்வொரு க்ருதியும் ஒரு ராகத்தின் அடிப்படையில் அமையும். அந்தக் க்ருதி ஒரு குறிப்பிட்ட
காலப்பிரமாணத்தில் தான் அதாவது ஒரு தாளத்தில் தான் இருக்க இயலும். ஆதி, திருபுடை, கண்ட சாபு
என்றவாறு பல லய அமைப்புகள் உள்ளன.
தனி ஆவர்த்தனத்தில் ஏதாவது ஒரு தாளத்தின் விஸ்தாரத்தை விளக்கமாகக் கூறவேண்டும். இதற்கு லய விஸ்தாரம் என்று பெயர். இது சங்கீத வித்வான்களின் கடமை எனவே கருதப்படுகிறது. ராகத்தை விஸ்தரித்து அதன் பரிணாமங்களை ஒரு ஆலாபனையில் தருவது போல், ஒரு லயத்தின் பரிணாமத்தினையும் தர வேண்டும் ஆக, பக்க வாத்யம் என்பது இசை நிகழ்ச்சியின் ஒரு முக்கிய அங்கம். அவர்களின் தனி ஆவர்த்தனம் இல்லாத கச்சேரிகள் முழுமையாக ஆகாது.
இன்று நாம், கடம், மிருதங்கம், கஞ்சிரா, மோர்சிங், தபலா போன்ற பக்கவாத்யங்களின் தனி ஆவர்த்தனத்தைக்காண்போம் அல்லது கேட்போம்.
முதலில் பிரபல கட வித்வான் திரு. சுரேஷ் அவர்களின் தனி ஆவர்த்தனம் ( திரு சுரேஷ் எனது அத்தையின் பேரன். என்னுடன் பல காலம் கணினி மென்பொருளாளராக இருந்தவர். ஸி ப்ரொக்ராமில் அன்றைய காலத்தில் நிபுணராக இருந்தார். நான் சொல்வது 1994 ல். பின் இசையின் பால் குறிப்பாக லயத்தில் அவரது ஈர்ப்பு அதிகம் இருந்ததால், தனது பதவியை துறந்து கட வித்வானாக சென்று, இன்று உலகத்தில் எல்லா நாடுகளிலும் தன் பெயர் பிரசித்தமாகும் அளவிற்கு உயர்ந்திருக்கிறார்.
அவரது கச்சேரி முதலில் .
ghatam suresh
அடுத்து உமையாள்புரம் சிவராமன் அவர்கள். வாசிப்பது கண்ட சாபு தாளம்.
Umayalpuram sivaraman. kanda chapu thalam
http://www.musicindiaonline.com/p/x/NUf0IYPgnd.As1NMvHdW/?done_detect
பாலக்காடு மணியின் நாதம் இன்பத்தின் எல்லைக்கோடு எனலாம். அவர் மிருதங்கம் கவி பாடும்
என்றால் மிகையாகாது. அவரது தனி ஆவர்த்தனம் இங்கே.
Excerpted percussion solo (Thani Avarthanam) from a rare television broadcast of Alathur Shri Srinivasa Iyer (Vocal), Lalgudi Shri G. Jayaraman (Violin) and percussion maestro Palghat Shri T. S. Mani Iyer (Mridangam).
இங்கே உமையாள்புரம் வினாயக்ராமுடன் சேர்ந்து. அப்பாடி ! அபாரம் !!
umayalpuram K.Sivaraman and Vikku vinaykram
கொன்னக்கோல் கேட்டிருக்கிறீகளா ! ரசித்திருக்கிறீகளா ! தாளக்கட்டுகளை அப்படியே வாத்யத்தில் வாசிப்பதுபோல வாயினாலே சொல்வது. வெகு கஷ்டமான கலை. இந்தக் கலையில் தேர்ந்தவர்கள்
இப்போதெல்லாம் அதிகம் பேர் இல்லை.
konnakol
வினாயக் ராம் தனி ஆவர்த்தனம் கடத்தில் இங்கே.
ghatam vinayakram
அடுத்து, கணேஷ் ராம் அவர்கள் கஞ்சிரா. இதை வெஸ்டர்ன் இசை அறிஞர்கள் ஹார்மொனிய ட்ரம்
என்கிறார்கள்.
ganeshkumar kanjira
இத்தனையும் கேட்டுவிட்டு, தபலாவைக்கேட்காமல் அதுவும் ஜாகிர் ஹுசேன் அவர்கள் தனி ஆவர்த்தனத்தினை
க்கேட்காமல் இருக்கமுடியுமா ?
tabla zakir hussain
இன்னொன்று ஜாகிர் ஹுசேனின் கலைதனை புகழ்ந்து சொல்லும் இசை வல்லுனர்கள்.
zakir hussain
எல்லாக் கச்சேரியும் மங்களத்தில் தான் முடியும். முடியணும். இங்கே டாக்டர் பாலமுரளி தானே இயற்றிய
அற்புதமான மங்கள இசைதனைப் பாடுகிறார்.
mangalam by Dr.Balamurali krishna
என்ன கேட்டு மகிழ்ந்தாச்சா ?
Enjoy the Thani Avarthanam to your Heart’s content.
Good Luck.
இதயத்திற்கு இதமளிக்கும் இனிய ராகங்கள்.. A BILINGUAL ILLUSTRATION OF CLASSICAL MUSIC BOTH CARNATIC AND HINDUSTHANI Let us enjoy melodies
Tuesday, June 24, 2008
Friday, June 13, 2008
தமிழ் தியாகராஜர் ** பாபனாசம் சிவன்
WHAT A BLESSING WAITS FOR US !
Thirupathi Perumal Lord Balaji
Sri Papanasam sivan has composed this immortal song
SRINIVASA THIRU VENKATAMUDAYAN... RAAG HAMSA NANDHI
என்ன ஆச்சரியம் !!
( சிவனைப் பற்றி எழுதுவோம் என ஆரம்பித்தால்,
பெருமாள் வந்துவிட்டாரே !!
சரிதான் !! ! )
திருவேங்கடமுடையானிடம் பாபனாசம் சிவன் என்ன அப்படி வரம் கேட்கிறார் ?
Courtesy: KVNVASU
இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றிய பாபனாசம் சிவன் அவர்களை தமிழ் தியாகராஜர் என்று இசை உலகம் போற்றி மகிழும். இவைகளில் பெரும்பாலும் தமிழில் இயற்றப்பட்டு, அவைகளில் ஏறத்தாழ 400 பாடல்கள் கர்னாடக சங்கீத ராகங்களில் அமையப்பெற்றவை. சுமார் 800 பாடல்கள் தமிழ் படங்களுக்காக இயற்றப்பட்டவை. இவைகளிலும் பல கர்னாடக சங்கீத மெட்டிலே அமையப்பெற்று உள்ளன்.
தனது ஆரம்ப நாட்களில் இவர் நூரானி மஹாதேவ பாகவதர் மற்றும் சம்பா
பாகவதர் அவர்களிடம் இசை பயின்றதாகத்தெரிகிறது.
1934 முதல் 1939 சென்னை கலாக்ஷேத்ராவில் ஆசிரியராகவும் பணி புரிந்துள்ளார்.
இக்கல்லூரி ருக்மணி அருன்டேலினால் துவக்கப்பட்டதென்பதை யாவரும் அறிவர்.
1935ல் தான் இவர் சினிமா படங்களுக்கு பாடல் எழுதத் துவங்கினார் என்றும் ஒரு நான்கு படங்களில் கூட நடித்திருக்கிறார் எனவும் சொல்லுகிறார்கள்.
பெருமளவில் இவரது சினிமா பாடல்கள் பக்திரசத்துடனும் சமூகச் சிந்தனையுடன் அமைந்திருந்தன.
இவரது பல பாடல்களில் ராமதாஸ் எனும் முத்திரை கவனிக்கலாம். இருப்பினும்
எல்லாப்பாடல்களிலும் முத்திரை பதிக்கவில்லை.
M.K.THYAGARAJA BHAGAVATHAR SINGS IN 'SIVAKAVI' LYRIC BY PAPANASAM SIVAN
"soppana vazhvil magilndhen.."
" நான் ஒரு விளையாட்டு பொம்மையா ஜகன் நாயகியே உமையே
உனக்கு நான் ஒரு விளையாட்டு பொம்மையா"
நவரச கானடா வில் அமைந்திருக்கும் இப்பாடல் எத்துணை பொருள்
செறிந்துள்ளது.
இந்தச் சிறுமி எவ்வளவு அழகாக பாடுகிறாள் பாருங்கள் !
அந்த அன்னை இச்சிறுமிக்கும் எல்லாம் அருளட்டும் .
NEXT IS A CLASSICAL .
Song: karpaga manOhara
RAgam: malayaMArutam (sounds similar to Valachi) janya of ChakravAgam
TAlam: khanda chApu
Composer: Papanasam Sivan
nOW A DANCE PROGRAMME
வாழிய நீடூழி புவி மீதிலே
1963ல் வந்தது இந்த படம். கருப்பு வெள்ளைதான்.
இசை அறிஞர் எஸ்.வி.வெங்கடராமன் இசை அமைத்து
பி.லீலா , ராதா ஜெயலக்ஷ்மி பாடியது.
அந்த காலத்தில் "அறிவாளி" படம் பிரசித்தம். ஓஹோன்னு ஓடியது.
சிவாஜி கணேசன், பானுமதி நடித்த அந்தப்படத்தில் " வாழிய நீடூழி புவி மீதிலே " என்று துவங்கும் நடன இசைக்கு பாடல் எழுதியவர் பாபனாசம் சிவனே.
.
என்ன நடனம் ! என்ன பாடல் ! என்ன குரல் வளம்!!
அத்தனையும் சிவாஜியின் முகத்திலும் பானுமதியின் முகத்திலும்
பிரதிபலிக்கிறதே !!
( யூ ட்யூபில் இதைப் போட்டவர் ஒரு தருமவான் !
எம்பெட்டட் disabled on request என இங்க்லீஷிலே போட்டிருக்கிறார்.
அவர் வாழ்க. ) God Bless him.
இருந்தாலும் இந்த சுட்டியில் சுட்டி சென்று மகிழ்ந்து உடனே வந்துவிடுங்கள்.
DO NOT MISS TO SEE THIS VIDEO BUT COME BACK, AS MORE TREASURE WAITS FOR U AND U ONLY.
http://www.youtube.com/watch?v=q5O1R-rPFJM
பாபனாசம் சிவன் பாடல்களை, சினிமா உலகில் எம்.கே.தியாகராஜ பாகவதர் (சிவகவி),எம்.எஸ் அவர்கள் ( சகுந்தலை, சாவித்ரி ) ( தியாகபூமி யில் டி.கே.பட்டம்மாள் அவர்களும் பாடியவை குறிப்பிடத்தக்கவை. இன்னும் ஒரு 800 பாடல்கள் அச்சு வடிவில் வரவில்லை எனவும் சொல்கிறார்கள். இவரது புதல்வி Dr.Rukmani ஒரு வலை தளத்தில் தந்திருக்கிறார். Those of you who would prefer to have texts of all songs in pdf format, kindly click below:
http://www.geocities.com/Athens/Acropolis/1428/
1890 ல் தஞ்சைக்கு அருகே இருக்கும் போலகம் எனும் சிறு ஊரில் பிறந்த அவரை அவருடன் வாழ்ந்தவர் பலரும் ராமையா என்றே கூப்பிடுகிறார்களாம். பாபனாசம் என்ற ஊரில் ( தஞ்சைக்கும் கும்பகோணத்திற்கும் இடையில் உள்ளது ) வெகு காலம் இருந்த இவர் கேரளாவில் திருவனந்தபுரம் சென்று 1910 வரை அங்கே பல மலையாள சம்ஸ்க்ருத பாடல்களையும் இயற்றியதுடன் மொழி பெயர்த்தும் இருக்கிறார் என வரலாறு சொல்கிறது. இந்த மேதையை சென்னை ம்யூசிக் அகடெமி வெகு காலம் கழித்தே அங்கீகாரம் செய்தது என்பது தமிழ் சங்கீத உலகின் நீங்காத வருத்தம். பாபனாசம் சிவன் அவர்களின் பாடல்களை ஒரு சரத்தில் கோர்த்து கீழே தந்திருக்கிறோம். அருமையான, எளிய, இனிய பாடல்களை, அன்றைய, இன்றைய பிரபல பாடகர்களின் வளமிகு குரலில் கேட்டு மகிழுங்கள்.
http://www.musicindiaonline.com/p/d/report/.4m2qlMxymZ3MmUvqImKi-yys6HQAEZy/?js11=true&cdp=true&ry=true&rv=11.0.0.431&wmy=true&wmv=11%2C0%2C5721%2C5145
http://www.musicindiaonline.com/p/x/.4m2qlMxymZ3MmUvqImKi-yys6HQAEZy/?done_detect
Log On here to listen to how Papanasam Sivan inspired Professors of Princeton University http://www.sawf.org/newedit/edit10152001/musicarts1.asp
இன்றைய தமிழ் வலை உலகிலே பாபனாசம் சிவன் அவர்களுக்கு
ஓர் இசை வாரிசு என்று எதிர்காலத்தில் உருவாகக்கூடிய சிறப்பு மிக்க கவிஞர்
பலர் உளர். நொடிப்பொழுதில் கவிதை எழுதும் உற்சாகம், திறன் கொண்ட
வல்லுனர்கள் இருப்பது தெரிகிறது.
இவர்கள் எல்லோரும் வாக்தேவியின் அருளைப் பெற்றிட
பாபனாசம் சிவன் இயற்றிய பாடலையே ஒன்று
எல்லோரும் சேர்ந்து பாடிடுவோம்
A sanskrit devotional song on Goddess Saraswathi
TRICHUR RAMACHANDRAN SINGS. (AUDIO COURTESY; WEBSITE QUOTED ABOVE )
HAVING SAID ALL, WE WAIT FOR SOMEONE AMIDST THE WEB WORLD (WHO PENS HER POEMS IN FRACTIONS OF A SECOND ) TO EMERGE
ENTHUSIASTICALLY AS A WORTY SUCCESSOR TO TAMIL THYAGARAJA.
Tuesday, June 10, 2008
Sruthi Bedam or Graha Bedam
Gruha Bedham Or Sruthi Bedham !
ஸ்ருதி பேதம் என்றால் என்ன ?
ஒரு ராகத்தின் ஆதார ஷட்ஜம் எதுவோ அதை எடுத்துக்கொள்ளவும்.
உதாரணமாக தோடி ராகத்தை எடுத்துக்கொண்டால்,
ஸ ரி1 க2 ம1 ப த1 நீ2 ஸ
ஸ நீ2 த1 ப ம1 க2 ரி1 ஸ
இப்பொழுது இதில் ஆரோகணத்தில் உள்ள ஷட்ஜம் ஸ்வரத்தை அதே தோடி ராகத்தில்
உள்ள ரிஷபத்துக்கு எடுத்துச் செல்லவும். சென்று அதை ஷட்ஜம் என வைத்துக்கொள்ளவும். (அதே போல,க2 ரி1 ஆகவும், ம1 க2 ஆகவும் முறையே ஆகும்) இதனால் கல்யாணியின் ரி1 தோடியின் க போல் கேட்கப்படும்.
இதே போல தோடியின் ஷட்ஜத்தை அதே தோடியின் கா ந்தாரத்துக்கு மாற்றி அதை
ஷட்ஜமாக ஏற்று மற்ற ஸ்வரங்களை அதே வரிசையில் அமைத்தால் நிகழ்வது
ஹரி காம்போஜி.
இதுபோல தோடியின் ஆதார ஸ்வரமான ஷட்ஜத்தை ரிஷபம், கான்தாரம், மத்யமம்,என்ற வரிசையாக மாற்றும்போது கிடைக்கும் ஜன்ய ராகங்கள் : கல்யாணி,ஹரி காம்போதி, நட பைரவி, சங்கராபரணம், கரஹரப்ரியா. (தோடியின்
பஞ்சமத்தில் ஸ்ருதி பேதம் ஏற்படும்போது ஒரு ராகத்திற்கு இரண்டு மத்யமங்கள் நிகழ்வதை கவனிக்கவும்)
உதாரணமாக, வசந்த ராக மத்யமத்தில் ச்ருதி பேதம் :
ஸ நீ3 த 1 ப ம2 க 3 ஸ
ரமணி என்னும் ராகம் வருகிறது.
இப்போது அ ந்தி மழை எனும் பாடலைக் கேட்போம். Courtesy: Shasun
LET US PROCEED TO CLASSICAL CARNATIC NOW .
Perhaps in instrumental field, we may be able to understand this better.
Prasanna playing the grand carnatic raga Karaharapriya and does graha bedham at the nishada to bring out an extensive treatment of the raga Sankarabharanam. and goes back to Karaharapriya. From live concert at YGP auditorium, Chennai, India on Dec 24, 2006.
I shall try to enunciate further on this topic, volatile protests from my
orthodox grammarian sister notwithstanding.
ஸ்ருதி பேதம் என்றால் என்ன ?
ஒரு ராகத்தின் ஆதார ஷட்ஜம் எதுவோ அதை எடுத்துக்கொள்ளவும்.
உதாரணமாக தோடி ராகத்தை எடுத்துக்கொண்டால்,
ஸ ரி1 க2 ம1 ப த1 நீ2 ஸ
ஸ நீ2 த1 ப ம1 க2 ரி1 ஸ
இப்பொழுது இதில் ஆரோகணத்தில் உள்ள ஷட்ஜம் ஸ்வரத்தை அதே தோடி ராகத்தில்
உள்ள ரிஷபத்துக்கு எடுத்துச் செல்லவும். சென்று அதை ஷட்ஜம் என வைத்துக்கொள்ளவும். (அதே போல,க2 ரி1 ஆகவும், ம1 க2 ஆகவும் முறையே ஆகும்) இதனால் கல்யாணியின் ரி1 தோடியின் க போல் கேட்கப்படும்.
இதே போல தோடியின் ஷட்ஜத்தை அதே தோடியின் கா ந்தாரத்துக்கு மாற்றி அதை
ஷட்ஜமாக ஏற்று மற்ற ஸ்வரங்களை அதே வரிசையில் அமைத்தால் நிகழ்வது
ஹரி காம்போஜி.
இதுபோல தோடியின் ஆதார ஸ்வரமான ஷட்ஜத்தை ரிஷபம், கான்தாரம், மத்யமம்,என்ற வரிசையாக மாற்றும்போது கிடைக்கும் ஜன்ய ராகங்கள் : கல்யாணி,ஹரி காம்போதி, நட பைரவி, சங்கராபரணம், கரஹரப்ரியா. (தோடியின்
பஞ்சமத்தில் ஸ்ருதி பேதம் ஏற்படும்போது ஒரு ராகத்திற்கு இரண்டு மத்யமங்கள் நிகழ்வதை கவனிக்கவும்)
உதாரணமாக, வசந்த ராக மத்யமத்தில் ச்ருதி பேதம் :
ஸ நீ3 த 1 ப ம2 க 3 ஸ
ரமணி என்னும் ராகம் வருகிறது.
இப்போது அ ந்தி மழை எனும் பாடலைக் கேட்போம். Courtesy: Shasun
LET US PROCEED TO CLASSICAL CARNATIC NOW .
Perhaps in instrumental field, we may be able to understand this better.
Prasanna playing the grand carnatic raga Karaharapriya and does graha bedham at the nishada to bring out an extensive treatment of the raga Sankarabharanam. and goes back to Karaharapriya. From live concert at YGP auditorium, Chennai, India on Dec 24, 2006.
I shall try to enunciate further on this topic, volatile protests from my
orthodox grammarian sister notwithstanding.
Saturday, June 07, 2008
kesadhi paadam .. A Raghamalika
குருவாயூரப்பனை பக்தியுடன் வர்ணிக்கும் அழகான பாடல் இது
ராக மாலிகை. சாரங்க ராகம் இரண்டாவதாக வருகிறது பாருங்கள். முதலிலே மோஹனம். கடைசியில் வருவது மத்யமாவதி.
இது போலத்தான்
துளசி கோபால் திருமணத்தன்று நடந்த நாட்டியக்கச்சேரியும்
இருந்திருக்கும். அங்கு செல்லாதவர்களுக்காக
இது மறுபடியும்..
Monday, June 02, 2008
இந்த ராதா கல்யாணம். இந்த பைரவி
இந்த பைரவி ராகத்தை மட்டும் எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காது .
கேளுங்கள் இங்கே உபசாரமுலு கீர்த்தனையை.
ராதா கல்யாண நிகழ்ச்சியிலே
சகுண பக்தி ஸம்பன்னம் இந்த ராதா கல்யாணம்.
பக்தர்கோடிகள் தம்மை மெய் மறந்து
இசைக்குத் தகுந்தாற் போல் நடனமாடி
இறைவன் தாள் பணியும் காட்சி
நம் கண்களைப் பனிக்க வைக்கிறது.
Upacharamu... By Udayalur Kalyanaraman at Alangudi Radhakalyanam - 2008. Abhinayam by Sri.Narayana Sivam Sivachariy
கேளுங்கள் இங்கே உபசாரமுலு கீர்த்தனையை.
ராதா கல்யாண நிகழ்ச்சியிலே
சகுண பக்தி ஸம்பன்னம் இந்த ராதா கல்யாணம்.
பக்தர்கோடிகள் தம்மை மெய் மறந்து
இசைக்குத் தகுந்தாற் போல் நடனமாடி
இறைவன் தாள் பணியும் காட்சி
நம் கண்களைப் பனிக்க வைக்கிறது.
Upacharamu... By Udayalur Kalyanaraman at Alangudi Radhakalyanam - 2008. Abhinayam by Sri.Narayana Sivam Sivachariy
Subscribe to:
Posts (Atom)